பாகிஸ்தானில் இரண்டு பள்ளி சிறுவர்கள் அறைந்து விளையாடும் போட்டியில் விளையாடிக்கொண்டு இருந்த போது ஒரு மாணவன் இன்னொரு மாணவனின் வேகமான அறை காரணமாக மரணமடைந்து இருக்கிறான். பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளி இடைவேளை நேரத்தில் பிலால், அமீர் ஆகிய மாணவர்கள் ''தபார் கபடி'' எனப்படும் கன்னத்தில் அறைந்து விளையாடும் போட்டியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.