ஜாலியன் வாலாபாக் போன்ற துப்பாக்கிச் சூடு : நீதிபதிகள் கருத்து-

Oneindia Tamil 2018-06-08

Views 2.6K

ஜாலியன் வாலாபாக் போன்ற தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தமிழகத்துக்கு கரும்புள்ளி என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.இதுதொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் 8 பேர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS